விஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வித்தியா கொலை குற்றவாளியை காப்பாற்றியவரும் அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவருக்கும் எதற்கு எம்.பி பதவி என குறிப்பிட்டவாறு வாசகங்கள் எழுதப்பட்டு ‘நாளைய தலைமுறை’ என்பவர்களால் அச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலை புலிகள் தொடர்பான உரையின் சர்சையின் தொடர்ச்சியாய் பதவிஜை ராஜினாமா செய்த அவருக்கு ஆதரவாக “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு யாழ் நகரில் அன்மையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு எதிராக ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed